Kathir News
Begin typing your search above and press return to search.

'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்' - டெல்லியில் பணிந்த முதல்வர் ஸ்டாலின்!

உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் - டெல்லியில் பணிந்த முதல்வர் ஸ்டாலின்!

Mohan RajBy : Mohan Raj

  |  18 Jun 2021 2:01 AM GMT

"உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்" என டெல்லி பயணத்தின் பிரதமர் மோடி சந்திப்பின் முடிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவி ஏற்றபின் முதன்முறையாக டெல்லி சென்ற ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். எதிர்கட்சியாக இருந்த போதிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் இன்றைய சந்திப்பின் முடிவில் மறைந்த முன்னாள் முதல்வரின் வார்த்தைகளான "உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்" என்ற வாசகத்தை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் இன்றைய டெல்லி பயணத்தை பற்றி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில், "மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தேன்.

"உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!" என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நிலைப்பாடே திமுக அரசின் நிலைப்பாடு!" என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News