Kathir News
Begin typing your search above and press return to search.

தேவாலயத்தின் முகப்பு ‌மறைப்பதாக கூறி வீட்டின் சுவர் இடிப்பு - தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

தேவாலயத்தின் முகப்பு ‌மறைப்பதாக கூறி வீட்டின் சுவர் இடிப்பு - தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  21 Jun 2021 2:37 AM GMT

தென்காசி அருகே கடையத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தின் முகப்பை மறைப்பதாகக் கூறி வீட்டின் சுற்று சுவரை இடித்து கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தேவாலயத்தை சேர்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புலவனூர் என்ற இடத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் ஒரு பகுதி 2 அடி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி அருகில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சை சேர்ந்தவர்கள் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதற்கு செல்லத்துரையின் வீடு சிஎஸ்ஐ சர்ச்சை மறைக்கும் வண்ணம் அமைந்திருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் செல்லதுரையை மிரட்டி வந்த சில நபர்கள் நள்ளிரவில் அவரது வீட்டின் சுற்று சுவரை இடித்ததோடு, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, அவரது ஆட்டோவையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்ட நபர்கள் செல்லத்துரைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

செல்லத்துரை அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ், தேவகிறிஸ்டியன், அப்பாத்துரை, பால்ராஜ் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News