Kathir News
Begin typing your search above and press return to search.

கல்பாக்கத்தில் அதிர்ச்சி.. மர்மமான முறையில் இறந்த விஞ்ஞானியின் உடல் மீட்பு!

கல்பாக்கத்தில் அதிர்ச்சி.. மர்மமான முறையில் இறந்த விஞ்ஞானியின் உடல் மீட்பு!

ParthasarathyBy : Parthasarathy

  |  23 Jun 2021 2:50 PM GMT

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையில் பயிற்சி விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் சத்திய சாய்ராம். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவரை கடந்த 20 ஆம் தேதி முதல் காணவில்லை. இவரது பெற்றோர் பல இடங்களில் இவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து சத்ய சாய்ராமின் உடல் எரிந்த நிலையில் வயலூர் பாலாறு தடுப்பு அணை அருகே காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


பல இடங்களில் தேடியும் அவர்களது மகன் எங்கும் கிடைக்காத நிலையில் அவர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். அவரது பெற்றோர்களின் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ECR சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் அவர் பெட்ரோல் வாங்கிகொண்டு சைக்கிளில் செல்வதை கண்டறிந்தனர். இதனிடையே வயலூர் பாலாறு தடுப்பு அணை அருகே பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரிந்த நிலையில் சத்ய சாய்ராமின் உடலை காவல் துறையினர் மீட்டனர்.

இவரது மர்மமான மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News