Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட அமெரிக்க அதிபர்!

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட அமெரிக்க அதிபர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Jun 2021 6:04 PM IST

உலகெங்கும் உள்ள பல பகுதிகளில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மக்களின் மனதில் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவில் அதிகமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன இதை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் அவர்கள் அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.


துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக சட்ட விரோத கடத்தல் துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்க அதிரடியாக 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கடந்த 18 மாதங்களில் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கி வன்முறை ஒரு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது. மேலும், இப்போது சட்ட விரோத துப்பாக்கி வர்த்தகத்தை முற்றிலுமாக தடுப்பதற்கு 5 பணிக்குழுக்கள் அமைக்க பட்டுள்ளன.


துப்பாக்கி சூடு மற்றும் பிற வன்முறையில் பயன்படுத்தப்படுகிற சட்டவிரோத கடத்தல் துப்பாக்கி வினியோகத்தை தடுப்பதில் இந்தக் குழுக்கள் ஒரு முக்கிய அங்கமாக அமையும்" என கூறப்பட்டுள்ளது. இந்த 5 பணிக்குழுக்கள் நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, வாஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தல் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி விளங்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News