Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்டா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசியை கட்டாயமாக்கிய ஜெர்மனி!

டெல்டா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசியை கட்டாயமாக்கிய ஜெர்மனி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 July 2021 6:43 PM IST

டெல்டா வகை வைரஸ்கள் காரணமாக உருமாறிய கொரோனா தற்போது வேகமாக உலக நாடுகளில் பரவி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஜெர்மனியிலும் அதிகமாக உருமாறிய டெல்டா வகை வைரஸ்கள் காரணமாக ஜெர்மானிய அரசு ஒரு திடீர் முடிவு எடுத்துள்ளது. ஜெர்மனியில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாகும் நடவடிக்கை தான் அது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஜெர்மனி கட்டாயமாக்காது என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் இதுபற்றி தற்பொழுது தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறுகையில், "ஜெர்மனி மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது தற்போது தீவிரமாகப் பட்டு உள்ளது. மேலும் இது செயல் மற்றவர்களுக்கு விருப்பமில்லை என்றாலும், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடுவது உறுதி செய்திரதடுப்பூசி, சமூக இடைவெளியைக் கடைபிடித்தலை உறுதி செய்தல், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டாயம் செய்வோம்" என்று அவர் கூறினார்.


இந்த நிலையில் ஜெர்மனியில் டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்த 85% மக்களுக்காவது குறைந்தபட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. எனவே பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கு கட்டாயம் அனைவருக்கும் தடுப்பூசி சென்றடைவது உறுதி செய்ய வேண்டும் என்று ஜெர்மனிய அரசாங்கம் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News