Kathir News
Begin typing your search above and press return to search.

கற்பழித்த பாதிரியாரைத் திருமணம் செய்ய அனுமதி கேட்கும் பெண்- பின்னணி என்ன?

The rape victim has accepted to marry the priest

கற்பழித்த பாதிரியாரைத் திருமணம் செய்ய அனுமதி கேட்கும் பெண்- பின்னணி என்ன?

ShivaBy : Shiva

  |  1 Aug 2021 9:19 AM GMT

கேரளாவில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியே பாதிரியாரை திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

2019 பிப்ரவரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கருவுற்றதை தொடர்ந்து கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் பாதிரியார் ராபினை உடனடியாக சர்ச் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய பின்னர் அவர் 2020ஆம் ஆண்டு சர்ச் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஒரு கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்தவர். கத்தோலிக்க பாதிரியார் ராபின் பணிபுரிந்த சர்ச்சில் டேட்டா என்ட்ரி வேலைக்காக 2016 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அந்தப் பெண் சேர்ந்துள்ளார். ஒருநாள் யாரும் இல்ல சமயம் பார்த்து பாதிரியார் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்று மிரட்டிய பிறகு அவர் அவளை வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளார்.

சிறுமி தனது குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லவில்லை. பின்னர் அவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மாலை நேரத்தில் தேவாலயத்திற்குச் சென்று வழிபாடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். எனினும் பாதிரியாருக்கு பயந்து எந்த விவரத்தையும் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

பிப்ரவரி 7, 2017 அன்று, சிறுமியின் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கண்ணூரில் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் கிறிஸ்து ராஜா மருத்துவமனையில் அவர் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

இதற்காக பாதிரியார் ராபின் மருத்துவமனையில் செலவான 30,000 ரூபாயை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த சிறுமி பெற்றெடுத்த குழந்தையையும் ஒரு கிறிஸ்தவ அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை, அனாதை இல்லம் இரண்டுமே பாதிரியார் ராபின் பணிபுரிந்த திருச்சபையின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

மைனர் சிறுமி குழந்தை பெற்றதால் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த நிலைக்கு சிறுமியின் தந்தை தான் காரணம் எனவும் அவரை மிரட்டி காவல் துறையினரிடம் பொய் சொல்ல வைத்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பாதிரியார் ராபின் தான் என்று இறுதியில் தெரிய வந்ததைத் தொடர்ந்து பிரான்சுக்கு தப்பி செல்ல முயன்ற அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின் முடிவில் நீதிமன்றம் அவருக்கு கடுங்காவல் தண்டனை விதித்தது.

தற்போது சிறை தண்டனையிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக பாதிரியார் ராபின் தெரிவித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அது நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறுமியே பாதிரியாரைத் திருமணம் செய்து கொள்ள அறுமதிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்துள்ளார். தந்தையையே மிரட்டி கற்பழித்ததாக வாக்குமூலம் கொடுக்க வைத்த பாதிரியார், பாதிக்கப்பட்ட பெண்ணையும் மிரட்டி இவ்வாறு மனு தாக்கல் செய்ய வைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் பெண் மற்றும் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதால் நீதிமன்றம் இதற்கு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


Source: The Indian எக்ஸ்பிரஸ்


Image courtesy: The Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News