Kathir News
Begin typing your search above and press return to search.

ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்- கொதிக்கும் இந்து முண்னணி !

அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னரிடம் மனு

ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்- கொதிக்கும் இந்து முண்னணி !

TamilVani BBy : TamilVani B

  |  27 Sep 2021 6:00 PM GMT

விடுமுறை நாட்களில் புனித தலங்கள் திறக்கபடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சனி கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்கு இந்து முண்ணனி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முண்னணி அமைப்பு கவர்னரிடம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசின் கொரோனா கால நடவடிக்கைகளை மீறி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திமுக காரர்களுடன் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வு ஆலயம் திறக்கப்பட்டிருக்கும் போது நடைபெற்றால் பக்தர்களின் கருத்துக்களை கேட்டிருக்க முடியும்.

ஆனால் ஆலயம் மூடப்பட்டிருக்கும் போது ஆய்வு மேற்கொண்டுள்ளது தமிழக அரசின் உத்தரவை மீறியுள்ள செயலாகும். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News