Kathir News
Begin typing your search above and press return to search.

தொழுகை நடத்திய போது குண்டிவெடிப்பு., ஆப்கானில் தொடரும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் !

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

தொழுகை நடத்திய போது குண்டிவெடிப்பு., ஆப்கானில் தொடரும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் !

TamilVani BBy : TamilVani B

  |  10 Oct 2021 2:02 AM GMT

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நோட்டா படைகள் வெளியேறியதும் அங்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் தாலிபான்கள் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தனர்.

தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்ததும் அங்கு வன்முறையும் பழமைவாதமும் தலைதூக்கும் என மக்கள் அச்சப்பட்டு அங்கிருந்து வெளியேறி வந்தனர். ஆனால் அங்கு அமைதியான ஆட்சி நிலவும் என தாலிபான்கள் உறுதி அளித்திருந்தனர்.

ஆனால் அதற்க்கு மாறாக அங்கு பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 50 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஆப்கானில் இது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Source:News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News