Kathir News
Begin typing your search above and press return to search.

சிங்களர்களிடம் இருந்து அதிகாரத்தை பெற்றுக்கொடுங்கள்: பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் கடிதம்!

சிங்களர்களிடம் இருந்து அதிகாரத்தை பெற்றுக்கொடுங்கள்: பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் கடிதம்!

ThangaveluBy : Thangavelu

  |  20 Jan 2022 4:40 AM GMT

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த 1987ம் ஆண்டு இலங்கை, இந்தியா அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கையொப்பம் இட்டுள்ளனர். அந்த ஒப்பந்தப்படி இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும்.

ஆனால் இலங்கையில் உள்ள சிங்கள கட்சிகள் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடிக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழர் கட்சிகள் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக இலங்கை தமிழ் கட்சியினர் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Source: Dinamalar

Image Courtesy: National Herald

Next Story
கதிர் தொகுப்பு
Trending News