இனி தடுப்பூசி சான்றிதழ் இல்லை எனில் ஏழுமலையான் தரிசனம் கிடையாது - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
By : Mohan Raj
இனி கொரோனோ இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருமலா-திருப்பதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி தரிசனத்திற்கு கொரோனா கட்டுப்பாடுகளை புதிதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "பக்தர்களை திருப்பி அனுப்பாமல், சிரமப்படுத்தாமல் இருக்க இனி திருப்பதி வேங்கடவன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் கையுடன் கொண்டு வரவேண்டும்.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்த ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் நெகட்டிவ் என்ற நிலையில் இருக்க வேண்டும்" என அறிவித்துள்ளது.
மேலும், "இந்த இரு சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று இல்லாதவர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாமல் மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைசாவடியில் திருப்பி அனுப்பப்படுவர் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.