Kathir News
Begin typing your search above and press return to search.

ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உக்ரைன்! என்ன நடக்கிறது தெரியுமா ?

ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உக்ரைன்! என்ன நடக்கிறது தெரியுமா ?

DhivakarBy : Dhivakar

  |  24 Feb 2022 8:41 AM GMT

ரஷ்யா உக்ரைனுக்கு இடையே போர் நிலவுவதால், உலக முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல நாட்களாக பதற்றமான சூழ்நிலை உருவாகி இருந்த நிலையில், இன்று போர் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ரஷ்யப் படையினர் உக்ரைனில் ஊடுருவி தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.

உக்ரைன் நாட்டு மக்கள், ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடியாக உக்கிரனும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்ய நாட்டின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உக்ரைனால் சுட்டு வீழ்த்தப்பட்டது.


உக்ரேனின் பதிலடி தாக்குதலால் ரஷ்யா தன் தாக்குதலை வீரியத்துடன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உக்ரைன் ரஷ்யா இடையேயான இந்த பதற்றமான சூழ்நிலையில், உலக அரசியலில் உச்சகட்ட பதட்டமும் பரபரப்பும் சூழ்ந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News