Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ThangaveluBy : Thangavelu

  |  7 March 2022 12:11 PM GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு இடையே இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் நாட்டுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் படிப்பு மற்றும் வர்த்தக ரீதியில் பயணம் செய்திருந்தனர். அது போன்று சிக்கியவர்களை உக்ரைனில் இருந்து இந்தியா சிறப்பு கவனம் செலுத்தி மீட்டு வருகிறது. இதற்கு ஆபரேஷன் கங்கா எனவும் பெயரிட்டுள்ளது.

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் வாயிலாக 15,900க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது வரையில் கார்கிவ் மற்றும் சுமியைத் தவிர, மீதம் இருக்கின்ற பகுதியில் இருப்பவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் சுமியில் இருப்பவர்களை மட்டும் மீட்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் மோடிக்கும் கூறியுள்ளார். மேலும், போரால் இந்திய குடிமக்களுக்கு வழங்கிய உதவிக்கு பாராட்டுக்களையும் கூறியுள்ளார். அதே சமயம் இந்தியர்களை மீட்பதற்கு உக்ரைன் உதவியதற்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை கூறியுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News