பா.ஜ.க சார்பில் இலவச நீட் தேர்வு பயிற்சி முகாம் - ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்திய அண்ணாமலை
By : Mohan Raj
'தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக' அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க சார்பில் நாமக்கலில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'நீட் தேர்வால் அனைவருக்கும் சமவாய்ப்பு மத்திய அரசு வழங்கியுள்ளது. நீட் தேர்வு வந்த பிறகுதான் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றார்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது, 'தமிழகத்தில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நீட்தேர்வு 30 ஆயிரம் பேர் அதிகமாகவே மாணவர்கள் எழுதுகின்றனர் எனவும் நீட் தேர்வை கண்டு அச்சப்பட தேவையில்லை' எனவும் அண்ணாமலை அறிவுறுத்துகிறார்.
ஆளும் தி.மு.க அரசு நீட் தேர்வை ரத்து செய்கின்றோம் என கூறி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பா.ஜ.க வில் நீட் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்திருப்பது தமிழக அரசியல் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.