Kathir News
Begin typing your search above and press return to search.

"பா.ஜ.க'வினரை வீதியில் வைத்து அடிக்க வேண்டும்!" -பேருந்தில் பிரச்சாரம் செய்யும் சமூக விரோதி! பதிலடி கொடுத்த பொதுமக்கள்!

பா.ஜ.கவினரை  வீதியில் வைத்து அடிக்க வேண்டும்! -பேருந்தில் பிரச்சாரம் செய்யும் சமூக விரோதி! பதிலடி கொடுத்த பொதுமக்கள்!

DhivakarBy : Dhivakar

  |  12 Aug 2022 7:52 AM GMT

"RSS மற்றும் பா.ஜ.க இயக்கத்தினரை வீதியில் வைத்து அடிக்க வேண்டும்" என்று பேருந்தில் பொதுமக்களிடம் சமூக விரோத பிரச்சாரத்தை மேற்கொண்ட நபருக்கு பொதுமக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.


சமீபகாலமாக தென்னிந்தியாவில் வலதுசாரி இயக்கத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் வலதுசாரி இயக்கங்களை, மக்களிடம் தவறாக சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து நடந்தேறி வருகிறது.


இந்நிலையில், சமூக வலைதளத்தில் பரவும் காணொளி ஒன்று அதற்கு சான்றாக அமைந்துள்ளது.


அக் காணொளியில், பேருந்து ஒன்றில் பொதுமக்களிடம் ஒரு இளைஞன் "சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில், அவர்களை ஒன்னும் செய்ய முடியாது. ஆகவே பா.ஜ.க மற்றும் RSSகாரர்களை வீதியில் வைத்து அடிப்பதன் மூலம் தான் பிரச்சனை சரியாகும். அதற்கு மக்கள் களத்தில் இறங்க வேண்டும்." என்று முழுவதுமாக வெறுப்பை உமிழ்ந்து, மக்களிடம் சமூக விரோத பிரச்சாரத்தை அந்த இளைஞன் மேற்கொண்டார்.


இதனைக் கேட்டுக்கொண்டிருந்த பேருந்து பயணி ஒருவர் "நான் RSSகாரன் தான் என்னை அடிப்பியா நீனு? என்ன பேசுற... 'RSSகாரன் BJPகாரன அடியுங்கள்' அப்படினா என்ன அர்த்தம்? ஏய் RSSகாரன் பிஜேபி காரன அடிப்பியா நீனு? எதுக்குடா அடிப்ப? அத சொல்றா.. RSSகாரன அடிப்பேன் சொல்ற... அவ்வளவு சாதாரனமா போச்சா?"


என்று சமூக விரோத பிரச்சாரம் செய்த அந்த நபரை நோக்கி பேருந்து பயணி ஒருவர் கேள்வி எழுப்பினார். உடனடியாக திக்குமுக்காடிய அந்த நபர், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். இக்காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News