Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க கவுன்சிலர் என்றால் ரெண்டு கொம்பா முளைச்சு இருக்கு? ரோட்டில் நடந்து சென்ற மாணவர்களை ஆபாசமாக திட்டி தாக்கிய அழிச்சாட்டியம்!

தி.மு.க கவுன்சிலர் என்றால் ரெண்டு கொம்பா முளைச்சு இருக்கு? ரோட்டில் நடந்து சென்ற மாணவர்களை ஆபாசமாக திட்டி தாக்கிய அழிச்சாட்டியம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 March 2023 2:06 AM GMT

கல்லுாரி மாணவரை தாக்கிய தி.மு.க கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தனியார் கல்லுாரியில் மாணவர் தினேஷ்குமார் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.இவர் உட்பட 2 நண்பர்கள், சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு கல்லுாரி முடிந்து மதுரை ரோட்டில் நடந்து வந்தனர்.

அரசு மருத்துவமனை அருகே பாலம் கட்டுமான பணி நடப்பதால் ஓரமாக நடந்து சென்றனர்.அப்போது, அதிவேகமாக காரில் வந்தவர்கள், மாணவர்களை ஓரமாக செல்லுமாறு கூறி ஆபாசமாக திட்டினர்.

ஓரமாக தான் செல்கிறோம். ஏன் திட்டுகிறீர்கள் என, மாணவர்கள் கேட்டுள்ளனர். காரில் இருந்து இறங்கிய திருப்புத்துார் பேரூராட்சி தி.மு.க., 14வது வார்டு கவுன்சிலர் பஷீர் அகமது, 8 வார்டு தி.மு.க., கவுன்சிலரின் கணவர் பிரேம் நவாஷ் உட்பட 4 பேர் மாணவர் தினேஷ்குமாரை கடுமையாக தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தினர்.

மற்ற மாணவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டு திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்படி, தி.மு.க., கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிந்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News