Kathir News
Begin typing your search above and press return to search.

வாழ்க்கையில் எப்போதும் பணக்கஷ்டம் வராமல் இருக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் என்னவென்று தெரியுமா?

வாழ்க்கையில் எப்போதும் பணக்கஷ்டம் வராமல் இருக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் என்னவென்று தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  7 Jun 2023 12:45 PM IST

இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற விஷயங்களில் சாணக்கியருக்கு நல்ல அனுபவம் உண்டு. சாணக்கியர் எழுதிய நெறிமுறைகள் இன்றும் மனிதர்களுக்கு பல வாழ்க்கை முறைகளை கற்பிக்கிறது. அவற்றை கடைபிடித்தால் மனிதனின் வாழ்க்கை கவலைகள், சிரமங்கள் இன்றி சுமூகமாக செல்லும் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

இந்த விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் பணக்கஷ்டம் வராது என்கிறார் சாணக்கியர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.சாணக்கிய நீதியின் படி, எப்போதும் கவலைகளும் கண்ணீரும் இருக்கும் வீட்டிலும் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருக்கும் வீட்டிலும் லட்சுமிதேவி வசிக்க மாட்டார். லட்சுமிதேவி அமைதி நிலவும் இனிமையான வீட்டில் எப்போதும் வாழ்கிறார்.

சாணக்கிய நீதியின்படி, நாம் கஷ்டத்தில் இருக்கும் போது பணம் உண்மையான நண்பன் போல செயல்படுகிறது. பணத்தை தொண்டு, முதலீடு மற்றும் சுய பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும். சொத்துக்களை குவிப்பதற்காக மட்டுமே பணத்தை செலவழிக்கக் கூடாது. அதே சமயம் செல்வத்தை தண்ணீரைப் போல வீணாக்கக் கூடாது. சிந்தனையுடன், பணத்தை சரியான நேரத்தில் செலவிட வேண்டும்.

சாணக்கிய நீதியின் படி பணத்தை எப்போதும் நேர்மையாக வழியில் சம்பாதிக்க வேண்டும். ஒழுக்கக்கேடான வழிகளில் சம்பாதிக்கும் பணம் நீண்ட காலம் நிலைக்காது. பணம் எப்போதும் சரியான வழியில் சம்பாதிக்க வேண்டும், அதுதான் நீண்ட காலம் நிலைக்கும்.

வீட்டில் எப்போதும் தானியக் களஞ்சியத்தை முழுவதுமாக வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்டோர் ஹவுஸ் நம் வயிற்றை நிரப்புவது மட்டுமல்லாமல், வீட்டில் செல்வத்தை எப்போதும் நிலைத்திருக்க வைக்கிறது. தானியம் காலியாகும் முன்பு புதிய தானியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், லட்சுமி தேவியின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்கும். மேலும் உணவை ஒருபோதும் அவமதிக்கக் கூடாது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News