Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை மக்கள் செய்த சமத்துவம்...! உண்மை அம்பலமானதால் பதுங்கிய கம்யூனிச எம்.பி வெங்கடேசன்...!

மதுரை மக்கள் செய்த சமத்துவம்...! உண்மை அம்பலமானதால்  பதுங்கிய கம்யூனிச எம்.பி வெங்கடேசன்...!

Mohan RajBy : Mohan Raj

  |  24 Aug 2023 10:13 AM GMT

மடத்திற்கு சொந்தமான இடத்தை ஆட்டையை போட நினைத்து உண்மை அம்பலமானதால் பதுங்கிய மதுரை கம்யூனிஸ்ட் எம்பி...!

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன் தனது விளம்பர பிரியத்தினால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு...

இந்த நிலையில் மதுரையில் தனியார் மடத்திற்கு சொந்தமான இடத்தை இலவச பட்டாவாக அள்ளி வழங்கும் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் உண்மை அமபலமானதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் பழைய தேவி தியேட்டர் பின்புறம் பூந்தோட்டம் என்கின்ற பகுதியில் ஸ்ரீ வியாசராஜா மடத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. மடத்தின் இடம் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் சிலருக்கு அந்த இடத்தின் மீது கண்!

இதன் காரணமாக இந்த இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இலவச பட்டாவாக வழங்க சிலர் முயற்சி எடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு எம் பி வெங்கடேசன் தலைமை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது, அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல் ஜம்பமாக போஸ்டர் அடித்தெல்லாம் ஒட்டப்பட்டது. உடனே இந்த மடத்தின் இடத்தை தனியாருக்கு கொடுக்கும் நிகழ்ச்சி சட்டத்திற்கு புறம்பானது என இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அழைக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஆவணங்கள் மற்றும் விசாரணை அடிப்படையில் மடத்திற்கு சம்பந்தப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது எம்பி வெங்கடேசன் தலைமையில் நடக்க இருந்த இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்னியை விசாரித்த பொழுது லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் என்ற பெயரில் கம்யூனிச எம்.பி வெங்கடேசன் மாநகராட்சி வார்டுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மாவட்ட நிர்வாகி சார்பில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட தனது நிகழ்ச்சியில் கிடைத்த தீர்வாக வெளிக்காட்டி விளம்பரப்படுத்திக்கொள்கிறார் என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இது அப்பகுதியில் சர்ச்சையாக எழுந்தது, இதன் தொடர்ச்சியாக வியாச ராஜா மடத்திற்கு சொந்தமான தனியார் இடத்தை தேர்தல் ஆணையத்திற்காக சட்டத்திற்கு முரணாக தானம் அளிக்க கம்யூனிச எம்பி வெங்கடேசன் முயற்சி எடுத்துள்ளார் என மடத்தின் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

ஏற்கனவே மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.மோகன் இருந்தபோதும் இது போன்ற முயற்சி எடுக்கப்பட்டது அப்போது ஆவணங்களை வைத்து சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பட்டா வழங்கும் முயற்சி கைவிடப்பட்டது தற்போது மீண்டும் வெங்கடேசன் அதை கையில் எடுத்து மண்ணை கவியுள்ளார்.

இது குறித்து வியாசர் ராஜா மடத்தின் பொறுப்பாளர் ராகவேந்திரன் கூறும் பொழுது இப்பகுதியில் மரத்திற்கு சொந்தமான 27 ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, தற்போது இலவச பட்டா வழங்க எம்பி முயற்சி செய்கிறார் எம்பிக்கு அப்பகுதி மக்கள் சில தவறான தகவல்களை அளித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்ததற்கு பிறகு இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறினார் கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாக மடத்தின் இடத்தை எடுத்து மக்களுக்கு வழங்கி நல்ல பெயர் எடுக்க முயற்சித்து பின்னர் உண்மை அம்பலமானதால் மதுரை எம்பி வெங்கடேசன் பம்மி பதுங்கிய விவகாரம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் தேர்தல் வர முழுதாக 10 மாதம் கூட இல்லாத நிலையில் வரும் தேர்தலில் எப்படியாவது மீண்டும் மதுரை தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என நினைத்து எம்.பி வெங்கடேசன் களத்தில் இறங்கி பின்னர் மடத்தின் இடம் என்பதால் பம்மி ஓடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News