Kathir News
Begin typing your search above and press return to search.

வங்கிகள் டிஜிட்டல் திறனை மேம்படுத்த வேண்டும்... மத்திய நிதியமைச்சர் அறிவுரை..

வங்கிகள் டிஜிட்டல் திறனை மேம்படுத்த வேண்டும்... மத்திய நிதியமைச்சர் அறிவுரை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Sep 2023 2:36 AM GMT

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வடக்கு பிராந்திய கிராமப்புற வங்கிகளின் ஆய்வுக் கூட்டம் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தின் போது, மத்திய நிதியமைச்சர் ஆர்.ஆர்.பி.களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதை வலியுறுத்தினார். மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் உள்ள அனைத்து ஆர்.ஆர்.பி.களும் 2023 நவம்பர் 1-க்குள் டிஜிட்டல் ஆன்போர்டிங் திறனைப் பெறுவதை உறுதி செய்யுமாறு பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு அறிவுறுத்தினார்.


பிரதமர் ஜன்தன் திட்ட கணக்குகளின் நகல்களை அகற்றவும், குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகளுக்கு சேமிப்பு வசதியை எளிதாக்கவும் ஆர்.ஆர்.பி.க்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட கிளஸ்டர் பகுதிகளில் கிராமப்புற கிளைகளின் வலையமைப்பை அதிகரிப்பதில் வங்கிகள் எம்.எஸ்.எம்.இ கிளஸ்டர்களுடன் ஆர்.ஆர்.பி.களை வரைபடமாக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் கூறினார்.


பிரதமரின் முத்ரா திட்டம் மற்றும் நிதி சேர்க்கையின் கீழ் கடன்களை அதிகரிப்பதை நிதியமைச்சர் சீதாராமன் மேலும் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் நிதிச் சேவைகள் துறை செயலாளர், கூடுதல் செயலாளர், பிற மூத்த டி.எஃப்.எஸ் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, அந்தந்த மாநில அரசுகள், நபார்டு, ஸ்பான்சர் வங்கிகள் மற்றும் ஆர்.ஆர்.பி.க்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News