Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் தொடங்கப் போகும் போர்!! பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் நிகழும் பதட்ட நிலை!!

மீண்டும் தொடங்கப் போகும் போர்!! பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் நிகழும் பதட்ட நிலை!!
X

G PradeepBy : G Pradeep

  |  29 Oct 2025 6:29 PM IST

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கடைசியாக கடந்த மாதம் கூட இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் கத்தார் நாட்டில் இந்த இரண்டு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது அமைதி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்து தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் வைத்து இரண்டு நாடுகளும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் மீண்டும் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் ஓர் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News