Begin typing your search above and press return to search.
இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து கருத்துகள் தெரிவித்த மோகன் பகவத்!!

By : G Pradeep
RSS தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள் தான் என்றும், மக்கள் தங்கள் வீடுகளில் தாய்மொழியில் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாதி, மொழி மற்றும் பொருளாதார அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பிரிந்து கிடக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஒட்டுமொத்த நாடும் அனைவருக்கும் சொந்தமானது என்ற உணர்வே இந்தியாவின் அடையாளம் என்று மோகன் பகவத் கூறினார்.
பாஜக தலைவர்கள் இந்த உரையை வரவேற்றுள்ளனர், அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
ஆர்.ஜே.டி (RJD) எம்பி மனோஜ் ஜா, "திரிபுரா மாணவர் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்த மோகன் பகவத், இப்போது சமூக நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
Next Story
