Kathir News
Begin typing your search above and press return to search.

வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!!

வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!!
X

G PradeepBy : G Pradeep

  |  5 Jan 2026 7:05 PM IST

வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய மனு நிலுவையில் உள்ளது. வேதாந்தா நிறுவனம், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பியிருந்தது.


ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை என்று நிறுவனம் கூறியது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், "மனுதாரர் புதிய விண்ணப்பத்தை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதில் எந்தத் தடையும் ஏற்படாது" என உத்தரவு அளித்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வேதாந்தா நிறுவனம் இப்போது புதிய விண்ணப்பத்தை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News