Kathir News
Begin typing your search above and press return to search.

வலிமையான இந்தியாவை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும்!! அஜித் தோவல் பேச்சு!!

வலிமையான இந்தியாவை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும்!! அஜித் தோவல் பேச்சு!!
X

G PradeepBy : G Pradeep

  |  11 Jan 2026 8:28 AM IST

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய சுதந்திரம் மிகப்பெரிய விலைக்குப் பிறகு பெறப்பட்டது என்றும், வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வலிமையான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.


வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2.O, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கிய நிலையில் அங்கு உரையாற்றிய அஜித் தோவல், நமது முன்னோர்கள் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். நமது வரலாற்றுக்காக நாம் பழிவாங்க வேண்டும். நமது உரிமைகள், நமது யோசனைகள், நமது நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு சிறந்த இந்தியாவை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.


மேலும், நமது பாதுகாப்பையும், நமக்கு இருந்த அச்சுறுத்தல்களையும் புரிந்து கொள்வதில் நாம் தவறிவிட்டோம். நாம் அதில் அலட்சியமாக இருந்தபோது வரலாறு நமக்கு ஒரு பாடத்தைக் கற்பித்தது. அந்த பாடத்தை நாம் கற்றுக்கொண்டோமா? என கேள்வி எழுப்பினார்.


இந்தியாவின் பண்டைய நாகரீகம் மேம்பட்டதாகவும் அமைதியானதாகவும் இருந்தது என்றும், ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த கடந்தகால அலட்சியம் கடுமையான பாடங்களைக் கற்பித்தது என்றும் அஜித் தோவல் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News