Kathir News
Begin typing your search above and press return to search.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களை அனுமதிக்கிறது திருப்பதி தேவஸ்தானம்

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களை அனுமதிக்கிறது திருப்பதி தேவஸ்தானம்

Mohan RajBy : Mohan Raj

  |  9 March 2022 12:00 PM GMT

திருமலை திருப்பதியில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


திருமலா-திருப்பதி'யில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தன, இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து மீண்டும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை, மேல் சாட் வஸ்திரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.


இந்தக் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார உள்ளிட்ட சேவைகளை நேரடியாகவும் இணையதளம் மூலமும் கலந்து கொள்ளும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது, கலந்து கொள்பவர்களுக்கு பிரசாதம் வழங்குவதிலும் பழைய முறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்ஜித சேவைகள் உதயாஸ்தமன சேவை, விம்சதி வர்ஷ தர்ஷினி சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிபந்தனைகளுடன் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News