வெற்றியடைந்தது தேஜஸ் மார்க் 1 ஏ சோதனை ஓட்டம்..!
By : Sushmitha
நம் நாட்டின் பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உள்நாட்டிலே தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி கர்நாடகாவின் பெங்களூர் சேர்ந்த எச் ஏ எல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் 2021 ஆம் ஆண்டு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட எண்பத்தி மூன்று தேஜஸ் மார்க் 1 ஏ என்ற இலகுரகப் போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசு 46 ஆயிரத்து 899 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொண்டது.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி 2024 மார்ச் முதல் 2028 பிப்ரவரி ஆண்டிற்குள் இவற்றை முடித்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேஜஸ் மார்க் 1ஏ இலகுரக போர் விமானம் உருவாக்கப்பட்டு 18 நிமிடங்கள் அந்த போர் விமானம் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு அந்த சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்துள்ளதாக ஹெச் ஏ எல் நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் இந்த சோதனை ஓட்டமானது பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த இலகு ரகப் போர் விமானமானது, அடி நவீன ரேடார் வசதிகளையும், எந்தவித காலநிலைகளிலும் இலக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து வான்வழி தாக்குதலை மேற்கொள்வதற்கான தொழில் நுட்பங்களும் வெளிப்புற தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஜமார்வசதிகளும் இதில் உள்ளதாகவும், விரைவில் இந்த போர் விமானங்கள் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : Dinamalar