Kathir News
Begin typing your search above and press return to search.

தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு.. பிரதமர் மோடி பெருமிதம்..

தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு.. பிரதமர் மோடி பெருமிதம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Oct 2024 2:34 AM GMT

தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பல்வேறு உலக அமைப்புகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் மேம்பட்ட துப்புரவு மற்றும் தூய்மை மூலம் தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு இந்தியாவை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியுள்ளது என்பதை தலைவர்கள் எடுத்துரைத்தனர்.


இந்தியாவை தூய்மை நாடாக மாற்றுவதற்கும், மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்குமான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு முயற்சியான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது, "இன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் 10-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். இது, இந்தியாவைத் தூய்மையாக்குவதற்கும், மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்குமான ஒரு முக்கியமான கூட்டு முயற்சியாகும். இந்த இயக்கத்தை வெற்றிபெறச் செய்த அனைவரையும் நான் வணங்குகிறேன்" என கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News