தேர்தல் பிரச்சாரத்தை காண 10 நாடுகளின் 18 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த பாஜக..! அக்கட்சியினர் விரைவில் இந்தியா வருகை...!
By : Sushmitha
இந்தியாவில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 தேதி 21 மாநிலங்களில் உள்ள 12 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நடந்து முடிந்தது. மேலும் இனி வர இருக்கின்ற ஐந்து கட்ட தேர்தலும் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் முடிவடையுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகின்ற பிரச்சாரத்தை காண்பதற்கு பத்து நாடுகளில் உள்ள 18 அரசியல் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அதாவது வியட்னாமின் கம்யூனிஸ்ட் கட்சி, ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சி, ரஷ்ய அதிபர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி, இஸ்ரேலின் லிகுட் கட்சி, உகாண்டாவின் தேசிய எதிர்ப்பு இயக்கம் என பத்து நாடுகளைச் சேர்ந்த 18 அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுக்கு பாஜக அழைப்பு கடிதம் விடுத்துள்ளது.
மேலும் பாஜகவின் அழைப்பை ஏற்று லோக்சபா தேர்தலின் நேரடி அனுபவத்தை காண்பதற்கு அந்த அரசியல் கட்சி இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Source : Dinamalar