Kathir News
Begin typing your search above and press return to search.

டேங்கர் மாஃபியாவுக்கு இடமில்லை:1,111 ஜிபிஎஸ் வசதி கொண்ட தண்ணீர் டேங்கர்களை கொடியசைத்து தொடங்கி வைத்த டெல்லி முதல்வர்!

டேங்கர் மாஃபியாவுக்கு இடமில்லை:1,111 ஜிபிஎஸ் வசதி கொண்ட தண்ணீர் டேங்கர்களை கொடியசைத்து தொடங்கி வைத்த டெல்லி முதல்வர்!
X

SushmithaBy : Sushmitha

  |  20 April 2025 9:45 PM IST

டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஏப்ரல் 20 டெல்லி ஜல் வாரியத்திற்காக 1,111 ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீர் டேங்கர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்,குடிமக்கள் இப்போது பிரத்யேக டேங்கர் செயலி மூலம் தங்கள் இருப்பிடங்களைக் கண்காணிக்க முடியும் என்றும் முன்னாள் ஆம் ஆத்மி அரசாங்கத்தை குறிவைத்து, டேங்கர் மாஃபியாவின் பெயரில் முழு அமைப்பிலும் கசிவு இருப்பதாகவும் கூறியுள்ளார்

அதாவது தண்ணீர் தொட்டிகள் இருக்கும் இடம் முன்பு தெரியவில்லை ஆனால் டேங்கர்கள் மேற்கொள்ளும் பாதைகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால், அவற்றை இப்போது கண்காணிக்க முடியும் என்று டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்

2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், டெல்லி அரசு நீர் துறைக்கு ரூ.9,000 கோடியை ஒதுக்கியுள்ளது.இந்தத் தொகையில் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுதல்,நீர்நிலைகளை புத்துயிர் பெறுதல்,குழாய்கள் அமைத்தல் மற்றும் வடிகால்களை அகற்றுதல் உள்ளிட்டவை அடங்கும் என்று முதல்வர் குப்தா கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News