Kathir News
Begin typing your search above and press return to search.

இருந்த இடத்திலிருந்து 11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்!

இருந்த இடத்திலிருந்து 11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்!
X

SushmithaBy : Sushmitha

  |  29 Sept 2024 2:22 PM

இன்று ஒரே நாளில் மகாராஷ்டிரா முழுவதும் ரூபாய் 11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

முதலாவதாக மும்பையில் அரே காலனியிலிருந்து பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்ஸ் வரையில் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனை அடுத்து புனேயில் கட்டி முடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் புனே மற்றும் மும்பையில் திடீரென்று ஏற்பட்ட கனமழையால் பிரதமர் நரேந்திர மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து மக்களின் கோரிக்கை விடுத்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலமாக ரூபாய் 1,810 கோடி மதிப்பில் புனே மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஸ்வர்கேட் வரை கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதுமட்டுமின்றி ரூபாய் 2,955 கோடி மதிப்பில் ஸ்வர்கேட்டில் இருந்து கத்ரஜ் வரை செல்ல உள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூபாய் 6,400 கோடி மதிப்பில் மூன்று கட்டமாக நிறைவேற்றப்பட்ட 7,855 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தொழில்பேட்டையும் நாட்டிற்கு அர்ப்பணித்து, சோலாப்பூரில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தையும் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News