அண்ணமலைக்காக திரண்ட 12,000 தன்னார்வலர்கள்! "நம்ம கோவை நம்ம அண்ணா"
By : Sushmitha
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் மாநில தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் போட்டியிட்டார். அப்போதுதான் அவர் தமிழகத்திற்கு அறிமுகம் என்பதால் தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தன்னார்வத்தோடு நூற்றுக்கணக்கானோர் முன்வந்து அவருக்காக தேர்தல் பணிகளை செய்தனர்.
ஆனால் தற்பொழுது தமிழக முழுவதும் அண்ணாமலை குறித்து தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, அதனால் கடந்த முறை அண்ணாமலைக்காக திரண்ட தொண்டர் படையை விட தற்பொழுது அண்ணாமலைக்கு தேர்தல் வேலை செய்வதற்காக திரண்ட தொண்டர் படை எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதாவது, கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அண்ணாமலைக்காக தேர்தல் பணிகளை செய்ய தன்னார்வத்தோடு முன்வந்துள்ளனர், அவர்கள் அனைவரிடமும் அண்ணாமலை பேசி ஊக்கப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இவர்கள் அனைவருமே முழு நேர அல்லது பகுதி நேர வேலைகளில் வீட்டிலிருந்தபடியே பணியாற்றுபவர்களாக உள்ளனர்.
இப்படி நம்ம கோவை நம்ம அண்ணா என்ற முழக்கத்தோடு ஏப்ரல் 17-ஆம் தேதி வரை பணிகளில் செய்ய உள்ளோம் என்று தன்னார்வலர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பாஜக ஆதரவாளரும் மார்க் ஒன்று திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்திவருபவருமான சுதர்சன் தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar