மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கம் வந்தே பாரத் ரயில்கள்: மாஸ் காட்டும் மோடி அரசு!

வந்தே பாரத் ரெயில்கள் 130 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளது இந்திய ரெயில்வே. மத்திய பா.ஜ.க அரசின் கனவு திட்டங்களில் ஒன் ரஸ் ரெயிலை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி திட்ட மிட்டுள்ளார். இதற்காக ஒவ் வொரு ரெயிலையும் தாமே முன்னின்று தொடங்கி வைத்து வருகிறார். 2019 பிப் ரவரி மாதம் தொடங்கி தற் பி போது நாட்டில் 130-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவை 8, 16 அல்லது 20 பெட்டிகள் கொண்டதாக காணப்படுகின்றன. அதிக பட்சமாக 760 கிலோமீட்டர் தூரம் வரை இயக்கப்படுகி றது. வந்தே பாரத் எக்ஸ்பிர சின் அதிகபட்ச பயண நேரம் என்பது 9மணி நேரம் 5 நிமி டங்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 8 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டருக்கும் மேல், வேகத்தை எட்டக்கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இந் திய ரெயில்வேயில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக் கியதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதனால் சிறப்பு ரெயில் சேவைகள் கணிசமாக 54 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. அதேசமயம், மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரெயில்கள் செல்லும் அளவிற்கு 23 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Input & Image Courtesy: PIB