Kathir News
Begin typing your search above and press return to search.

பிரபுபாதா 150வது பிறந்தநாள் நிகழ்ச்சி! சிறந்த வழிகாட்டுதலை இந்திய மக்கள் பெறுகின்றனர்! பிரதமர் உரை!

பிரபுபாதா 150வது பிறந்தநாள் நிகழ்ச்சி! சிறந்த வழிகாட்டுதலை இந்திய மக்கள் பெறுகின்றனர்! பிரதமர் உரை!

SushmithaBy : Sushmitha

  |  9 Feb 2024 1:34 AM GMT

வைஷ்ணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளை பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பிரபுபாதா அவர்களின் 150 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி புதுடெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அந்த உரையில், ஸ்ரீல பிரபுபாதரின் செய்திகளில் இருந்து எண்ணங்கள் மற்றும் சிறந்த வழிகாட்டுதலை இந்திய மக்கள் பெறுகின்றனர். இந்த நிலையில் அவரது 150ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டார். மேலும் ஆன்மீக குருவின் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

வைஷ்ணவ நம்பிக்கைகளை பாதுகாத்து பரப்புவதில் முக்கிய பங்காற்றிய கௌடியா மெஷன் நிறுவனராகவே பிரபுபாதா அறியப்படுகிறார். மேலும் இந்த கௌடியா மிஷன் உலகம் முழுவதும் ஸ்ரீ சைதன்யா மகா பிரபுவின் போதனைகள் மற்றும் வைஷ்ணவத்தின் வளமான ஆன்மீக பாரம்பரியத்தையும் பரப்புவதில் முக்கிய பங்கை கொண்டது. அதுமட்டுமின்றி ஹரே கிருஷ்ண இயக்கத்தின் மையமாகவும் இது உள்ளது!

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News