Begin typing your search above and press return to search.
காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 1.59 லட்சம் மரக்கன்றுகள் நடவு!
காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 1.59 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
By : Karthiga
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈஷா அமைப்பின் காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 94 விவசாய நிலங்களில் சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1.59 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது . காவிரி கூக்குரல் இயக்கம் கலப்பணியாளர்களின் ஆலோசனைகளின் படி தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி உள்ளிட்ட விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர்.
நடப்பு ஆண்டில் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 45 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்கள் ஈஷா மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI
Next Story