Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்.. சந்தை மதிப்பு சுமார் ரூ.180 கோடியா..

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்.. சந்தை மதிப்பு சுமார் ரூ.180 கோடியா..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 March 2024 12:52 PM GMT

சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் சுமார் ரூ. 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சென்னையிலிருந்து மதுரைக்கு பொதிகை விரைவு ரயில் சென்றது. இதில் போதைப் பொருள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வுத் துறையினர் காலை ரயில் மதுரையை அடைந்ததும் சோதனை மேற்கொண்டனர்.


சம்பந்தப்பட்ட பயணி அடையாளம் காணப்பட்டு அவரது உடமைகளை பரிசோதித்ததில், மொத்தம் 30 கிலோ எடையுள்ள 15 பாக்கெட்டுகளில் வெள்ளை நிற பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மெத்தாம்ஃபேட்டமைன் என்று கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பயணி மற்றும் அவரது மனைவி இருவரும் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் மேலும் சில மெத்தாம்ஃபேட்டமைன் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, சென்னையில் சோதனையிட்டபோது, மொத்தம் 6 கிலோ எடையுள்ள 3 பாக்கெட்டுகளில் இருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.180 கோடியாகும். இது தொடர்பாக அந்த பயணி மற்றும் அவரது மனைவி இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News