Kathir News
Begin typing your search above and press return to search.

மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி ஐகோர்ட்! மீண்டும் ஆரம்பமாகும் 2ஜி வழக்கு!

மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி ஐகோர்ட்! மீண்டும் ஆரம்பமாகும் 2ஜி வழக்கு!

SushmithaBy : Sushmitha

  |  22 March 2024 10:07 AM GMT

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி நடந்த பொழுது 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அப்போதைய மத்திய அமைச்சர்களாக இருந்த ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்றனர் ஆனால் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

மேலும் அவர்களின் விடுதலையை எதிர்த்து சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அதோடு இது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்த விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதில் திமுகவிற்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் 2ஜி வழக்கில் ஆ ராசா மற்றும் கனிமொழி என இருவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News