Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா கொரோனாவை வெல்வதற்கு, இங்கிலாந்தில் உள்ள ரோட்டரி கிளப்புகள் ₹20 லட்சம் நன்கொடை.!

இந்தியா கொரோனாவை வெல்வதற்கு, இங்கிலாந்தில் உள்ள ரோட்டரி கிளப்புகள் ₹20 லட்சம் நன்கொடை.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Jun 2021 12:41 PM GMT

இந்தியாவில் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு உதவிகளை ரோட்டரி கிளப் சார்பாக பல நன்கொடையாளர்கள் செய்துள்ளார்கள் அந்த வகையில் தற்போது, இங்கிலாந்தில் உள்ள 20 ரோட்டரி கிளப் மற்றும் தனியான நன்கொடையாளர்கள் ஆகியோரின் உதவியுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையான உதவிகளை இந்த ரோட்டரி கிளப்புகள் செய்துள்ளனர். மேலும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.


சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரோட்டரி கிளப் சார்பாக சுமார் 20 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக் கவசங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மேலும் பல மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றுக்கான நன்கொடை இயக்கத்தை இங்கிலாந்து ரோட்டரி கிளப் சார்பாக இதன் தலைவர் ராஜ் மணி மற்றும் சென்னை பாட்னா கிளப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோர் இந்த சமூக நலப் பணிகளை மேற்கொண்டனர்.


இதன் விளைவாக இந்த கிளப்பில் உள்ள உறுப்பினர்கள் மூலமாக கிட்டத்தட்ட ரூபாய் ஐந்து லட்சம் வரை நிதியாக திரட்டப்பட்டது இந்த நிதி அனைத்தும் மக்களுக்கு நோய் தொற்று காலத்தில் மருத்துவ நிவாரண உதவிகளை வழங்க அனுப்பப்படும் என்று அவர்கள் கூறினார்கள். இந்த நிவாரண தொகை முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News