ஐந்து வருடத்தில் அதிகரித்த முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை..! மக்களவைத் தேர்தல் 2024!.
By : Sushmitha
2024 லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும் 96.9 கோடி வாக்காளர்கள் இயந்திரம் மூலம் வாக்களிக்க உள்ளனர், ராணுவம் காவல்துறை உள்ளிட்ட அரசு பணிகளிலும் நடப்பு தேர்தல் பணிகளிலும் உள்ள 19.1 லட்சம் பேர் அஞ்சல் வழி வாக்களிக்க உள்ளனர்.
அதுமட்டுமின்றி கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் போது வீட்டில் இருந்தே வாக்களிக்கும் முறையானது பீகாரின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அறிமுகமானது, அந்த முறை தற்போதும் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது 85 வயதிற்கு மேற்பட்டவரும் 40% மேல் உடல் நல பாதிப்பு கொண்டவர்கள் என சான்றிதழ் அளிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க உள்ளனர்.
அதோடு கடந்த 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட தற்போது 7.3 கோடி பேர் கூடுதலாக வாக்களிக்க உள்ளனர், மேலும் கடந்த 2019 முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கையானது 1.5 கோடியாக இருந்தது ஆனால் தற்பொழுது இந்த எண்ணிக்கை 1.8 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
Source : The Hindu Tamil thisai