Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சி:2030-ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறந்த முன்னேற்றம்!

இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சி:2030-ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறந்த முன்னேற்றம்!
X

SushmithaBy : Sushmitha

  |  10 May 2025 6:35 PM IST

இந்தியா தாய் - சேய் சுகாதாரக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2025 மே 07 அன்று இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தாய் - சேய் இறப்பு விகிதக் குறைப்பில் 2030-ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது

இந்தியாவில் பேறுகால இறப்பு தொடர்பான அறிக்கை 2019-21-ன் படி நாட்டில் பேறுகால இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 2014–16-ம் ஆண்டில் ஒரு லட்சம் நேரடி பிறப்புகளுக்கு 130 என இருந்த இந்த விகிதம் 2019–21-ம் ஆண்டில் 93 ஆகக் குறைந்துள்ளது


இதேபோல்,புள்ளிவிவர அறிக்கை 2021-ன் படி குழந்தை இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 39 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 27 ஆகக் குறைந்துள்ளது. பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கும் விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 26 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 19 ஆகக் குறைந்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2014-ல் 1000 பேருக்கு 45 ஆக இருந்தது,2021-ல் இது 1000 பேருக்கு 31 ஆகக் குறைந்துள்ளது.பாலின விகிதம் 2014-ல் 899 ஆக இருந்தது.2021-ல் இது 913 ஆக உயர்ந்துள்ளது

தாய்- சேய் இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் இந்தியாவின் முன்னேற்றம் உலகளாவிய சராசரியை விட அதிகமாக உள்ளது. 1990 முதல் 2023 வரையிலான 33 ஆண்டுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியா 78% வீழ்ச்சியை அடைந்துள்ளது. இது உலகளாவிய வீழ்ச்சியான 61% என்பதை விட சிறந்த செயல்பாடாக உள்ளது. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகித வீழ்ச்சியில் உலக அளவில் 54% வீழ்ச்சி என்பதை ஒப்பிடும்போது இந்தியாவில் 70% வீழ்ச்சி உள்ளது


இந்த நீடித்த முன்னேற்றங்கள் மத்திய அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் விளைவாக ஏற்பட்டதாகும். அரசின் முதன்மை சுகாதாரத் திட்டங்கள் கண்ணியமான, மரியாதைக்குரிய, உயர்தர சுகாதார சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்துள்ளன

Next Story
கதிர் தொகுப்பு
Trending News