மோடியின் உத்தரவாதம் - வளர்ந்த இந்தியா 2047.....நாளை வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை..!
By : Sushmitha
லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நாளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் முதல் கட்ட தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் தற்போது தீவிரமடைந்து வருகிறது. மேலும் தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் பாஜக மட்டும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்ததால் அதன் மீது மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கியது. இந்த நிலையில், நாளை ஏப்ரல் 14 அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கட்சி அலுவலகத்தில் வைத்து பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். அந்தத் தேர்தல் அறிக்கையில், மோடியின் உத்தரவாதம் வளர்ந்த இந்தியா 2047 என்பது கருப்பொருளாக இடம்பெற்றுள்ளது.
மேலும் பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை குழு அமைக்கப்பட்டு நாடு முழுவதும் வேன்கள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து இறுதியில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamalar