Begin typing your search above and press return to search.
பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்!

By : Sushmitha
பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் தமிழ்நாட்டில் 22 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுகின்றனர் என மக்களவையில் மத்திய வேளாண்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்
பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 19 தவணை தொகைகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 19-வது தவணைத் தொகையை 22 லட்சத்து 58 ஆயிரத்து 779 விவசாயிகள் பெற்றுள்ளனர் அவர்களுக்கு மொத்தம் 501 கோடியே 87 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
Next Story
