Kathir News
Begin typing your search above and press return to search.

தென் ஆப்பிரிக்காவை குறிவைக்கும் கொரோனாவின் 3வது அலை : பாதிப்பின் எண்ணிக்கை உயர்வு.!

தென் ஆப்பிரிக்காவை குறிவைக்கும் கொரோனாவின் 3வது அலை : பாதிப்பின் எண்ணிக்கை உயர்வு.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Jun 2021 6:05 PM IST

உலகின் பல நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் 3வது அலைகளை அவர்களை எதிர்கொண்டு வருகின்றனர். முதலில் ஏற்பட்ட வைரஸ் தொற்று காட்டிலும் அடுத்தடுத்த அலைகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்பது உலக நாடுகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இதுவரையிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.


தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,100 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு நீடிப்பதால் நிலைமை கவலையளிக்கிறது இவ்வாறு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News