Kathir News
Begin typing your search above and press return to search.

உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற மத்திய அரசின் நிறுவனம்.. 3வது முறை ATD-வின் சிறந்த விருது..

உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற மத்திய அரசின் நிறுவனம்.. 3வது முறை ATD-வின் சிறந்த விருது..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 May 2024 4:24 PM GMT

வணிக முடிவுகளை செயல்படுத்துவதில் உத்தி சார்ந்த அணுகுமுறைக்காக திறன் மேம்பாட்டிற்கான மதிப்புமிக்க ATD (திறன் மேம்பாட்டு சங்கம், அமெரிக்கா) சிறப்பு விருது 2024 மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்தியப் பவர்கிரிட் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விரிவான மின் பரிமாற்ற நெட்வொர்க்கின் திறமையான பராமரிப்பு மற்றும் பெரிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற சமீபத்திய தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் பவர்கிரிடின் புதுமையான அணுகுமுறையை இந்த ஆண்டுக்கான விருது எடுத்துக் காட்டுகிறது.


இந்த அங்கீகாரம் கற்றல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் பவர்கிரிடை உயர்நிலையில் வைக்கிறது. முன்னதாக 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏடிடி சிறப்பு விருது பெற்ற பவர்கிரிட் தற்போது கௌரவிக்கப்படுவது மூன்றாவது முறையாகும்.


அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற விழாவில் பவர்கிரிட் சார்பாக இயக்குநர் (பணியாளர்) டாக்டர் யதீந்திர துவிவேதி, தலைமைப் பொதுமேலாளர் (மனிதவள மேம்பாடு) பின் கிஷோர் முண்டு ஆகியோர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News