Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி 3.0 அரசு.. 2வது முறையாக பாதுகாப்பு அமைச்சராக தொடர்கிறார் ராஜ்நாத் சிங்..

மோடி 3.0 அரசு.. 2வது முறையாக பாதுகாப்பு அமைச்சராக தொடர்கிறார் ராஜ்நாத் சிங்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Jun 2024 1:20 PM GMT

ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வெற்றிகரமாகப் பொறுப்பு வகித்த ராஜ்நாத் சிங்கிற்குப் பாதுகாப்புத் துறையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமரின் ஆலோசனைப் படி குடியரசுத் தலைவர் ஒதுக்கி உள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராஜ்நாத் சிங், 2019 ஜூன் 1 அன்று, முதல் முறையாகப் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.


ராஜ்நாத் சிங் 1951 ஜூலை 10, அன்று உத்தரப் பிரதேசத்தின் சந்தோலி மாவட்டத்தில் பிறந்தார். கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார். 1977-1980 மற்றும் 2001-2003-ம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகப் பணி ஆற்றினார். 1991-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச அரசில் கல்வி அமைச்சராக இருந்தார். 1999-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மத்திய அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார்.

பின்னர் 2000 – 2002 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தார். 2003-ம் ஆண்டில், மத்திய அமைச்சரவையில் வேளாண் அமைச்சராகப் பணியாற்றினார். 1994-1999 மற்றும் 2003-2008-ம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2009-ம் ஆண்டில் அவர் 15 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2014 மே 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். 2019, 2024-ம் ஆண்டில், அவர் ராஞ்சி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News