Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ. 33,700 கோடி மதிப்பிலான திட்டங்கள்: நாட்டுக்கு அற்பணித்த பிரதமர் மோடி!

ரூ. 33,700 கோடி மதிப்பிலான திட்டங்கள்: நாட்டுக்கு அற்பணித்த பிரதமர் மோடி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 March 2025 9:24 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்று புத்தாண்டின் புனிதமான தொடக்கத்தையும், நவராத்திரியின் முதல் நாளையும் குறிக்கும் வகையில் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநிலம் மாதா மகாமாயாவின் பூமி என்றும், மாதா கௌசல்யாவின் தாய்வழி வீடு என்றும் கூறினார். தெய்வீகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஒன்பது நாட்களின் சிறப்பு முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். நவராத்திரியின் முதல் நாளில் சத்தீஸ்கரில் தனது பாக்கியத்தை வெளிப்படுத்திய அவர், பக்த சிரோமணி மாதா கர்மாவை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டதற்காக அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் ராமர் மீதான தனித்துவமான பக்தியை எடுத்துக்காட்டுகின்ற ராம நவமி கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா முடிவடையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், அவர்களை ராமரின் தாய்வழி குடும்பம் என்று குறிப்பிட்டார். இந்த புனிதமான தருணத்தில் மொஹபட்டா சுயம்பு சிவலிங்க மகாதேவின் ஆசீர்வாதங்களுடன், சத்தீஸ்கரின் வளர்ச்சியை விரைவு படுத்துவதற்கான வாய்ப்பை நரேந்திர மோடி எடுத்துரைத்தார். ஏழைகளுக்கான வீட்டுவசதி, பள்ளிகள், சாலைகள், ரயில்வே, மின்சாரம், எரிவாயு குழாய்கள் உள்ளிட்ட ₹ 33,700 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.


இந்தத் திட்டங்கள் சத்தீஸ்கர் குடிமக்களின் வசதிகளை மேம்படுத்துவதையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டவை என்று அவர் கூறினார். இந்த வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக அனைவருக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.தங்குமிடம் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அதை ஒரு பெரிய விஷயம் என்று அழைத்தார். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஒருவரின் கனவை நனவாக்குவது ஈடு இணையற்ற மகிழ்ச்சி என்று கூறினார். நவராத்திரி, புத்தாண்டை முன்னிட்டு, சத்தீஸ்கரில் மூன்று லட்சம் ஏழைக் குடும்பங்கள் தங்கள் புதிய வீடுகளில் நுழைவதை அவர் எடுத்துரைத்தார். இந்த குடும்பங்களுக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News