Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க 4 மத்திய அமைச்சர்களை அனுப்பும் பிரதமர் மோடி!

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க 4 மத்திய அமைச்சர்களை அனுப்பும் பிரதமர் மோடி!

ThangaveluBy : Thangavelu

  |  28 Feb 2022 7:52 AM GMT

உக்ரைனில் தற்போது போர் நடந்து வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக 4 மத்திய அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி அழித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்களை வான்வெளியில் சென்று மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் அண்டை நாடுகளுக்கு நகர்த்தப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

இதற்கான பணிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் விவகாரம் பற்றி பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்டக்குழு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான பணிகளை மேலும் வேகப்படுத்தி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமின்றி உக்ரைன் அருகாமையில் உள்ள நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இந்த ஆப்ரேசனுக்கு கங்கா என்று மத்திய அரசு பெயரிட்டு அதற்கான வேலைகளில் துரிதமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 28) மீண்டும் ஒரு ஆலோசனையை நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்களான ஹர்தீப் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜஜு மற்றும் வி.கே.சிங் உள்ளிட்டவர்கள் மீட்பு பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இக்குழு மாணவர்களையும், இந்தியர்களையும் மீட்பதற்கான பணிகளை துரிதப்படுத்துவார்கள் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News