முழு தேர்தல் அட்டவணை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர்! ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4!
By : Sushmitha
இந்தியா அரசியல் களமே பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்த லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணைய ராஜீவ் குமார் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதையும் எந்தெந்த மாநிலங்களுக்கு எப்போது தேர்தல் என்ற முழு தேர்தல் அட்டவணையையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, முதல் கட்ட தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அன்று அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழகம், திரிபுரா, உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், அந்தமான், காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவித்துள்ளார். இந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், இரண்டாம் கட்ட தேர்தலில் நான்கு மாநிலங்களும், மூன்றாம் கட்ட தேர்தலில் இரண்டு மாநிலங்கள், நான்காம் கட்டத் தேர்தலில் மூன்று மாநிலங்களிலும், ஐந்தாம் கட்ட தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கும், ஏழாம் கட்டமாக மூன்று மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றாலும் அனைத்து மாநிலங்களும் ஓட்டு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar