பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!! ரூ.4,666 கோடி ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தங்கள்!!

By : G Pradeep
பாதுகாப்பு அமைச்சகம் ரூ.4,666 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதில் சிறு துப்பாக்கிகள், நீரில் பயன்படுத்தப்படும் கனரக ஆயுதங்கள் அடங்கும்.
ராணுவத்துக்கும் கடற்படைக்கும் 2,770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.25 லட்சத்திற்கும் அதிகமான சிறு துப்பாக்கிகள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட், பிஎல்ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மேக்-இன்-இந்தியா முயற்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். இதனுடன், இந்திய கடற்படையின் குறிப்பிட்ட நீர்மூழ்க்கிக் கப்பல்களுக்கு 48 கனரக ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் 1,896 கோடி ரூபாய் மதிப்பில் இத்தாலியின் எஸ்ஆர்எல் நிறுவனத்துடன் கையெழுத்தானது.
இந்த ஆயுதங்கள் ஏப்ரல் 2028 முதல் தொடங்கி 2030-ம் ஆண்டுக்குள் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்த ஒப்பந்தங்கள் இந்திய ராணுவத்தின் போர் திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் 1,82,492 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
