Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் களைகட்டும் இரவு போதை விருந்து - ஈ.சி.ஆரில் சிக்கிய 500 பேர்

சென்னையில் களைகட்டும் இரவு போதை விருந்து - ஈ.சி.ஆரில் சிக்கிய 500 பேர்

Mohan RajBy : Mohan Raj

  |  21 March 2022 12:30 PM GMT

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் விடுதியில் சோதனை நடத்திய போலீசார் 500 பேர் மது விருந்தில் கலந்து கொண்டதையடுத்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


சென்னையில் வார இறுதிகளில் இரவுகளில் பெரும்பாலான இரவு விடுதிகளில் மது விருந்து, நடனத்துடன் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதனையடுத்து நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது பனையூர் அருகே சொகுசு விடுதியில் முறைகேடாக மது விருந்து நடப்பதாக தகவல் கிடைத்தது.


இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் விடுதியை சுற்றி வளைத்து சோதனை நடத்தும்போது 500'க்கும் மேற்பட்டவர்களை போதையில் பிடித்துள்ளனர். மேலும் அங்கு நடந்த மது விருந்தானது அனுமதி இல்லாமல் முறைகேடாக நடந்தது தெரியவந்துள்ளது, மது போதையில் உள்ள அனைவரின் தகவல்களையும் பெற்றுக்கொண்டு விருந்தில் கலந்து கொண்ட அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பியுள்ளனர்.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News