சென்னை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை: சுமார் 500 பேர் பங்கேற்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப சென்னை துறைமுக ஆணையத்தின் நேற்று அன்று பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த துறைமுகத்துக்குள் அமைந்துள்ள இரண்டு பாதுகாப்பு சார்ந்த இடங்களில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். சென்னை துறைமுக ஆணையம், இந்திய கப்பற்படை, இந்திய கடலோர காவல்படை, இந்திய விமான படை, தமிழ்நாடு காவல் துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, எண்ணெய் முனையம், சென்னை மாவட்ட நிர்வாகம், துறைமுகத்தை பயன்படுத்துவோர் இந்த மிகப்பெரிய ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி துறைமுகத்தின் பேரிடர் நிர்வாக திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. பிற்பகல் 4 மணிக்கு சித்தரிக்கப்பட்ட வான்வழி தாக்குதல் தொடங்கியது. அப்போது ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் குறித்து சம்மந்தப்பட்டவர்களை எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்தின் அவசரகால திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மத்திய/மாநில முகமைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.கடலிலிருந்து எதிர்நோக்கும் தாக்குதல்களை தடுப்பதற்கும் துறைமுகத்தின் கடற்பகுதியை அணுகுவதிலிருந்து பாதுகாப்பதற்கும் இந்திய கடலோர காவல்படை 2 கப்பல்களை தயார் நிலையில் உடனடியாக செலுத்தியது.
சித்தரிக்கப்பட்ட வான்வழி தாக்குதலின் போது, தீப்பற்றக் கூடிய பொருட்களுடன் வைக்கப்பட்டிருந்த தொட்டி வடிவ கட்டுமானத்தில் தீப்பிடித்ததாக சித்தரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்து அங்கு இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது காணாமல் போனவர்களை அடையாளம் காண்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, ஆம்புலன்ஸ் மூலம் அவசரகால பகுதிகளுக்கும், மருத்துவமனைக்கும் கொண்டு செல்வது மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்றவை செய்து காட்டப்பட்டன.