Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியாவில் உள்ள 10 ஆயிரம் ஹாங்காங் மக்களுக்கு நிரந்தர குடியுரிமை - பிரதமர் ஸ்காட் மாரிசன்.!

ஆஸ்திரேலியாவில் உள்ள 10 ஆயிரம் ஹாங்காங் மக்களுக்கு நிரந்தர குடியுரிமை - பிரதமர் ஸ்காட் மாரிசன்.!

ஆஸ்திரேலியாவில் உள்ள 10 ஆயிரம் ஹாங்காங் மக்களுக்கு நிரந்தர குடியுரிமை - பிரதமர் ஸ்காட் மாரிசன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 1:56 PM GMT

உலக நாடுகளுடைய எதிர்ப்புகளை மீறி சீனா ஹாங்காங்குக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டை விதித்து கைது செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் இந்த சட்டத்தால் அவதிப்படும் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தரும் வகையில் குடியுரிமை கொடுப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் சென்ற சில வாரம் முன்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்பு இருக்கும் 10,000 ஹாங்காங் மக்களுக்கு ஐந்து ஆண்டு விசா கெடுவை நீடிக்க பட்டதாகவும், இதனால் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கொடுக்கப் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமா ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News