100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,பொதுமக்கள் பலியாகவில்லை:ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் மூலம் குறைந்தது 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்
அதாவது மே எட்டாம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதல் இருக்கு இந்திய ராணுவம் கொடுத்த தக்க பதிலடி குறித்தும் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் நேற்று மே 7 இல் நடந்த தாக்குதல் பற்றி விளக்குவதற்கும் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது இந்த கூட்டத்தில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி குறித்த விபரங்களை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது
அப்பொழுது ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளித்த மத்திய பாதுகாப்பு தறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானை திருப்பித் தாக்குவோம் இந்திய இராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் மூலம் குறைந்தது 100க்கும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் அதோடு இந்த ஆபரேஷன் இன்னும் தொடர்கிறது கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் நடந்த இந்த தாக்குதலில் ஸ்கால்ப் ஏவுகணை மற்றும் ஹேமர் குண்டுகள் உட்பட அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷா-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைமையகம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது
இந்த தாக்குதலின் பொழுது பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம் என்று கூறியுள்ளார்